உலக சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி தற்போது ஐந்தாவது முறையாக ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
ஏப்ரல் 8, 2012 அன்று நடைபெற்ற ஓ.என்.ஜி.சி ஆசியன் பில்லியர்ட்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, தாய்லாந்து வீரர் தவாத் சுஜாரித்துக்கார்னுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பங்கஜ் 6-3 என்ற கணக்கில் தவாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
பங்கஜ் இதுவரை 6 முறை உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இந்த ஓஎன்ஜிசி ஆசியன் பில்லியர்ட்ஸ் பட்டத்தை 5வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment