கால்பந்து ஜாம்பவான் பீலே டுவிட்டர் சமூகவலை தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே ஆயிரம் கோல்களுக்கு மேல் அடித்தவர். கால்பந்தின் கடவுள் என்று கருதப்படுபவர். மூன்று முறை உலக கோப்பையை வென்றவர். தற்போது 71 வயது நிரம்பிய பீலே டுவிட்டர் சமூக வலைதளத்தில் செவ்வாய்கிழமையன்று காலை இணைந்தார்.
ஹலோ... உலக மக்களே என்னை டுவிட்டரில் இணைய வைத்ததற்கு உங்களுக்கு நன்றி. எனது வாழ்க்கையை இனிமேல் டுவிட்டர் மூலம் உங்களுடள் பகிர்ந்து கொள்ளப் போகிறேன், அன்புடன் பீலே என்று தனது முதல் டுவிட்டர் செய்தியாக அவர் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் பீலே இணைந்த சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

No comments:
Post a Comment