நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Tuesday, October 23, 2012


பாட்மின்டன்: செய்னா சாம்பியன்:
                                  ஓடென்ஸ்:  டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் 
இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

  டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் 
பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர்
பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, ஜெர்மனியின் ஜூலியானா
செங்கை எதிர் கொண்டார். முதல் செட்டில் அசத்திய செய்னா 21-17 என 
கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடிய செய்னா 
21-8 என வென்றார். இறுதியில், செய்னா 21-17, 21-8 என்ற நேர் செட் கணக்கில் 
வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

  சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், நீண்ட
ஓய்வுக்கு பின் பங்கேற்ற முதல் தொடரில் பட்டம் வென்று அசத்தினார்.
இது, செய்னாவின் 11வது சாம்பியன் பட்டம். தவிர இவர், இந்த ஆண்டு
வென்ற 4வது பட்டம். முன்னதாக இந்த ஆண்டு நடந்த இந்தோனேஷிய
ஓபன், சுவிஸ் ஓபன், தாய்லாந்து ஓபன் தொடர்களில் பட்டம் வென்றார்.
இதுகுறித்து செய்னா கூறியது: டென்மார்க் ஓபன் தொடரில் முதன்
முறையாக பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டென்மார்க் 
மற்றும் இந்திய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் 
கொள்கிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின், என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட ஓய்வுக்கு பின் விளையாடியதால், புத்துணர்ச்சிடன் களமிறங்கினேன். எனது வலது முழங்காலில் லேசான பாதிப்பு இருந்த போதிலும், முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடிந்தது. இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
        இவ்வாறு செய்னா கூறினார்.

Friday, October 19, 2012

பாட்மின்டன்: காலிறுதியில் சாய்னா

ஓடென்ஸ்:டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.
டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில், டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா, ஜப்பானின் மினட்சு மிடானியை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 21-14 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுரப் வர்மா, இந்தோனேசியாவின் சோனி டிவி குன்கோரோவிடம் 19-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 04 செப்ரெம்பர் 2012, 09:38.30 மு.ப GMT ]
லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா கலந்து கொண்டார். இதில் கிரிஷா 1.74 மீற்றர் உயரத்தை தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பிஜி நாட்டு வீரர் லிசா டிலானா தங்கப்பதக்கத்தையும், போலாந்தின் லூகாஸ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெங்களூரை சேர்ந்த 24 வயதாகும் கிரிஷா, கடந்த 2008ம் ஆண்டு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, இடது காலில் செயற்கை உறுப்பு பொருத்தி உள்ளார். பெங்களூரில் செயல்பட்டு வரும் சமர்த்தனம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கிரிஷா, உயரம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு அதிகாரி அந்தஸ்தில் வேலை: ரூ. 10 லட்சம் பரிசு
[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 06:23.17 மு.ப GMT ]
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளியான இந்திய வீரர் கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதன் உயரம் தாண்டுதலில் (எப் 42) காலில் குறைபாடுள்ள இந்திய வீரர் கிரிஷ நாகராஜ கவுடா (வயது 24) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில், எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒரு சாம்பியன். அவர் தான் எனது ரோல் மாடல்.
லண்டனில் மூவர்ணக் கொடியை இவர் ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டேன். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்.
வேலையில்லாமல் தவித்து வரும் கிரிஷாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அறிவித்தார்.
இது குறித்து இவர் டுவிட்டர் இணையதளம் மூலம் வெளியிட்ட செய்தியில், இந்திய விளையாட்டு ஆணையத்தில் அதிகாரி அந்தஸ்தில் பயிற்சியாளர் வேலை கிரிஷாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரூ. 10 லட்சம் பரிசு:
வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு இந்திய பாராலிம்பிக் வாரியம் (பி.சி.ஐ.,) ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இது குறித்து பி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும் இதில் சாதிக்கும் வீரர்களுக்கு யாரும் பரிசுத் தொகை வழங்க முன்வராதது ஏமாற்றமளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.