நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Friday, April 13, 2012

தியான் சந்துக்கு பின்பு சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கலாம்: அசாருதின்[


[வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 01:30.13 பி.ப GMT ]


ஹொக்கி வீரர் தியான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சினுக்கு டெண்டுல்கருக்கு வழங்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதின் தெரிவித்துள்ளார்.

அசாருதின் ஊடகத்தினரிடம் கூறுகையில், பாரத ரத்னா விருதுக்கு சச்சின் பொருத்தமானவர்தான். அவருக்கு அந்த விருதினை வழங்கலாம். நான் சச்சினுக்கு விருது தருவதை ஒருபோதும் ஆட்சேபித்ததில்லை.

ஆனால் அதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஹொக்கி வீரராக ஜொலித்த தியான் சந்த்துக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். அவர் இந்திய ஹொக்கிக்கு முகவரி கொடுத்தவர். இந்தியாவில் ஹொக்கி விளையாட்டு வளர்ச்சி பெற அவர்தான் முக்கியமான காரணம்.

அவரது காலத்தில் நல்ல ஹொக்கி மைதானம் கிடையாது, நல்ல ஹொக்கி மட்டை கூட கிடையாது. அப்படிப்பட்ட காலத்திலேயே அவர் சாதனை படைத்து பிரமிக்க வைத்தவர். எனவே அருமையான வீரரான அவருக்குத்தான் முதலில் இந்த விருதினை வழங்க வேண்டும்.

கடந்த 23 வருடமாக விளையாடி வரும் சச்சின் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே தான் செய்ய வேண்டும். அவர் விரும்பவில்லை என்றால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment