ஆஸ்தானா: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட, இந்திய மல்யுத்த வீராங்கனை கீதா தகுதி பெற்றுள்ளார். கஜகஸ்தானில் உள்ள ஆஸ்தானா நகரில், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 55 கி.கி., எடைப்பிரிவு பைனலில், இந்தியாவின் கீதா, கொரியாவின் ஜி-இயும் உமை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய கீதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் கீதா. தவிர இவர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதலாவது இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். கடந்த 2004ல் நடந்த ஒலிம்பிக்கில், முதன்முதலில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக இத்தொடரின் ஆண்கள் பிரிவில், முறையே தங்கம், வெள்ளி வென்ற இந்தியாவின் அமித் குமார் (55 கி.கி.,), யோகேஷ்வர் தத் (60 கி.கி.,) ஆகியோர் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
No comments:
Post a Comment