[ வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012, 03:04.15 மு.ப GMT ]
ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
3-வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை அடித்தது. தொடர்ந்து 24-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனைகள் 2-வது கோலை அடித்தனர்.
ஆக்லாந்தில் நிலவும் கடும் குளிரும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. பதில் கோல் அடிக்க கடுமையாகப் போராடிய இந்திய வீராங்கனைகள் 40 நிமிடத்தில் கோல் அடித்தனர்.
அனுராதா தேவி இந்த கோலை அடித்தார். இந்திய அணி இன்று நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது...
No comments:
Post a Comment