யூரோ 2012 கால்பந்து போட்டி வரும் ஜுன் 8ந் தேதி தொடங்கி ஜுலை 1ந் தேதி வரை போலந்து மற்றும் உக்ரேனில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஐரோப்பிய கோப்பை உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவுக்கும் ஐரோப்பிய கோப்பை கொண்டு வரப்படுகிறது.ஐரோப்பிய கோப்பை இந்தியாவுக்கு வர உள்ளது இதுவே முதல் முறை.
இந்தியாவில் கோல்கத்தா,மும்பை,டெல்லி,கோவா,கொச்சி,பெங்களுரூ போன்ற நகரங்களில் ஏதாவது மூன்று நகரங்களில் பொதுமக்களின் பார்வைக்கு ஐரோப்பிய கோப்பை வைக்கப்பட உள்ளது.இந்த மூன்று நகரங்களும் இணையதளம் மூலம் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
வாக்களிக்க விரும்புவோர் www.facebook.com/carlsberg என்ற பேஸ்புக் தளத்தில் சென்று வாக்களிக்கலாம்.இதற்கான ஏற்பாடுகளை கார்ல்ஸ்பர்க் நிறுவனம் செய்து வருகிறது.

No comments:
Post a Comment