நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Friday, October 19, 2012

வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு அதிகாரி அந்தஸ்தில் வேலை: ரூ. 10 லட்சம் பரிசு
[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 06:23.17 மு.ப GMT ]
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளியான இந்திய வீரர் கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதன் உயரம் தாண்டுதலில் (எப் 42) காலில் குறைபாடுள்ள இந்திய வீரர் கிரிஷ நாகராஜ கவுடா (வயது 24) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில், எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒரு சாம்பியன். அவர் தான் எனது ரோல் மாடல்.
லண்டனில் மூவர்ணக் கொடியை இவர் ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டேன். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்.
வேலையில்லாமல் தவித்து வரும் கிரிஷாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அறிவித்தார்.
இது குறித்து இவர் டுவிட்டர் இணையதளம் மூலம் வெளியிட்ட செய்தியில், இந்திய விளையாட்டு ஆணையத்தில் அதிகாரி அந்தஸ்தில் பயிற்சியாளர் வேலை கிரிஷாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரூ. 10 லட்சம் பரிசு:
வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு இந்திய பாராலிம்பிக் வாரியம் (பி.சி.ஐ.,) ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இது குறித்து பி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும் இதில் சாதிக்கும் வீரர்களுக்கு யாரும் பரிசுத் தொகை வழங்க முன்வராதது ஏமாற்றமளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment