2வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 20வது நிமிடத்தில் ரகுநாத் கோல் அடித்து கைகொடுத்தார்.
இதற்கு சீன வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 52வது நிமிடத்தில் ரகுநாத் 2வது கோல் அடித்து நம்பிக்கை தந்தார்.
பின்பு 53வது நிமிடத்தில் இந்தியாவின் பிமல் லக்ரா கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். கடைசி வரை போராடிய சீன வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment